பாரதத்தின்
எண்ணெற்ற கலாச்சாரக் கண்டுபிடிப்புகளுள் ஒன்று கோலம். முக்கியமாக
தென்னிந்தியாவில் பிரசித்திப் பெற்ற கலாச்சாரமாகும். கோலங்கள்
வாசலுக்கு மட்டும் விருந்தாளியல்ல, கூரை
ஓவியமாக கோவில்களிலும் மண்டபங்களிலும் விருந்தாளியாகக் காணலாம். வாசல் கோலங்கள் இடுவதென்பது
ஒரு கலையே அதுவும் பண்டிகைக்
காலங்களில் நம்மூர் பெண்கள் பட்டையைக்
கிளப்புவார்கள். ஓவியம் என்பது தனியொரு
கலையாகயில்லாமல் அன்றாட வாழ்வில் கலந்தவொன்றாவிட்டது.
அம்மாதிரி கலை மரபு வழியே
வந்ததாலோ என்னவோ திராவிடக் கட்டிடக்
கலையில் தனி முத்திரை கொண்டுள்ளோம்.
இத்தகைய
கோலங்கள் இணைய வெளிகளில் பரவலாக
படங்கள் வடிவில் பகிரப்படுகிறது. கோலம்
சம்மந்தமான மென்பொருட்கள் எதிர்காலத்தில் அதிகம் வரலாம். தற்போதைக்கு
கோலம் வடிவமைக்கும் மென்பொருட்கள் அதிகமில்லை ஆனால் இதுவரை இணையத்திலிருந்து
செயல்படும் ஒரே ஒரு செயலி
இங்கேவுள்ளது. அந்தவரிசையில் கோலசுரபி என்ற ஒரு புதிய
செயலி தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ்ப்புள்ளியின் மூன்றாமாண்டு
பிறந்த நாளன்று அறிமுகமாகும் இச்செயலியின்
மூலம் தான்தோன்றித்தனமாக பல கோலங்கள் உருவாக்கி
பயன்படுத்திக் கொள்ளமுடியும். 3X3 முதல் 20X20 புள்ளிகள் வரை இதில் உருவாக்கிக்
கொள்ளலாம். இதன்மூலம் வளை கோடுகள் மற்றும்
கம்பிக் கோடுகள் கொண்ட கோலங்களை
வேண்டிய அளவுகளில் பெற்றுக் கொள்ளலாம். சதுரம் அல்லது சாய்சதுர
வடிவிலும் உருவாக்கிக் கொள்ளலாம். தான்தோன்றித்தனமான கோலங்கள் என்பதால் ஒருமுறை வந்த கோலங்கள்
மறுமுறை வருவதறிது அதனால் ரசனையுள்ள கோலங்களை
Screenshot மூலம் படங்களாகவும் சேமித்துக் கொள்ளலாம்.
கோலம் அறியாத "பேதை"களுக்கும் , கோலம் பழகும் "பெதும்பை"களுக்கும், கோலம் தேடும் "மங்கை"களுக்கும், கோலம் வரையும் "மடந்தை"களுக்கும், கோலமிட்டுக் கலக்கும் "அரிவை"களுக்கும் இச்செயலி மேலும் உதவும்.
No comments:
Post a Comment